நாகர்கோவில், ஜன. 21 –
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, இந்து கல்லூரி போன்ற கல்லூரிகளில் மூட்டா மற்றும் எயூடி பேராசிரியர்கள் மாலை நேர காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காத்திருப்பு போராட்டம் மூட்டா கிளை செயலாளர் பேராசிரியர் பாக்கியம் ஜூலியஸ் தலைமையில் நடைபெற்றது.
அதில் ஒரே பணியை மேற்கொள்ளும் இரண்டு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அரசுப் பணியில் உள்ள கல்லூரி ஆசிரியர்கள் இடையே பாராபட்சம் காட்டுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 14 க்கு எதிரானது எனவும் அரசுக் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியத்தை வழங்கிவிட்டு அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு அதே பணி மேம்பாட்டு ஊதியத்தை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது என அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களின் கண்ணியத்தை பெரிதும் பாதிக்கிறது என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குமாரசாமி கல்லூரி மூட்டாகிளை தலைவர்.எஸ்.எம்.விஜிலா மற்றும் கிளை நிர்வாகிகளான பேராசிரியர்களான அனைவரும் கலந்து கொண்டனர்.



