சென்னை, நவ. 27 –
இந்தியாவின் முன்னோடித்துவ மிக்க, முறை சார்ந்த வீட்டு சிகிச்சை சேவை நிறுவனமும் [home healthcare provider], அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு பகுதியுமான ‘அப்போலோ ஹோம் கேர்’ (Apollo Homecare), 10-வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது.
2015ம் ஆண்டில், அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி அவர்களின் தொலைநோக்குப் பார்வையின் தொடர்ச்சியாக, மருத்துவமனையிலிருந்து தங்களது இல்லங்களுக்குத் திரும்பிய நாள்பட்ட நோய்களுள்ள மருத்துவ பயனாளர்களுக்கான சிகிச்சையில் நிலவும் இடைவெளியை நிரப்புவதற்காக அப்போலோ ஹோம்கேர் தொடங்கப்பட்டது. அப்போலோ ஹோம்கேர், கடந்த 10 ஆண்டுகளாக, நாடு முழுவதும், மருத்துவ பயனாளர்களுக்கு, அவர்களின் இல்லங்களிலேயே தடையற்ற மற்றும் மருத்துவமனைக்கு இணையான தரத்தில் சிகிச்சைகளை வழங்கி வருகிறது.
அப்போலோ ஹோம் கேரின் மருத்துவ முடிவுகள் (Clinical outcomes) உலகத் தரத்தை பிரதிபலிக்கின்றன. பல முக்கிய சிகிச்சை திட்டங்களில் மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கும் விகிதம் தொடர்ந்து 2%-க்கும் குறைவாகவே உள்ளது. இது இத்துறையின் மற்ற அளவீடுகளை விட மிகக் குறைவு. நாள்பட்ட நோய் நோய் பராமரிப்பில் 95% மருத்துவ சிகிச்சை நெறிமுறைகளைப் பின்பற்றியே மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், சிகிச்சையின் முடிவுகள் அனைத்தும் நேரடியான மருத்துவ கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு மூலம் சேவைகளின் தரம் உறுதி செய்யப்படுகிறது. இதனால் மருத்துவ பயனாளர்களுக்கு வழங்கப்படும் முறை சார்ந்த வீட்டு மருத்துவ பரமாரிப்பில் அப்போலோ ஹெல்த்கேரின் மருத்துவ ஆளுமை மற்றும் இல்லங்களில் மருத்துவமனைக்கு நிகரான சிகிச்சையை வழங்கும் அதன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றன.
இந்தப் பத்தாண்டுகளில், பயிற்சி பெற்ற செவிலியர்கள், இயன்முறை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், உணவு வல்லுநர்கள் மற்றும் ஆலோசகர்கள் [nurses, physiotherapists, doctors, dieticians, counsellors] உள்ளிட்ட 30,000-க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் அப்போலோ ஹோம்கேரின் நிபுணத்துவ சேவைகள் மூலம் பணியமர்த்தப்பட்டு, பயனடைந்துள்ளனர்.
அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர், டாக்டர் பிரதாப் சி. ரெட்டி கூறுகையில், “”பத்தாண்டுகளுக்கு முன்பு, அப்போலோ மருத்துவமனை அளிக்கும் மருத்துவ சிகிச்சைகளின் தரத்திலான அதே சிகிச்சையை மக்களின் இல்லங்களுக்கே நேரடியாகக் கொண்டு செல்லும் ஒரு புரட்சிகரமான முயற்சியாக இதை நாங்கள் தொடங்கினோம். இன்று, இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைச் சென்றடையும் சக்திவாய்ந்த இந்தச் சேவை, நாட்டின் வளர்ந்து வரும் சுகாதாரத் தேவைகளுக்கேற்ப விரிவுப்படுத்தக்கக்கூடிய, எல்லோருக்கும் ஏற்ற மலிவான கட்டணத்திலான தீர்வாக உருவெடுத்துள்ளது. இந்த மைல்கல், இந்தியாவின் ‘3எச் எதிர்காலம்’ (Health and Happiness at Home) அதாவது ‘வீட்டிலேயே ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி’ என்ற எனது நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. இந்த முறை சார்ந்த வீட்டு சிகிச்சை நமது நாட்டின் சுகாதார முறையின் மையப்புள்ளியாக மாறும் என்பதில் எனக்குள்ள நம்பிக்கையை இது மேலும் உறுதிப்படுத்துகிறது.” என்றார்.



