கோவை, நவ. 24 –
தமிழகத்தின் அரை நூற்றாண்டு காலமாக இலக்கிய அடையாளமாக திகழ்ந்தவரும் மூத்த படைப்பாளருமான கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு இழப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி பட்டாம்பூச்சி இலக்கிய அமைப்பு சார்பில் மறைந்த மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள அரிமா சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பட்டாம்பூச்சி குழுமங்களின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர். பொள்ளாச்சி முருகானந்தம் தலைமை தாங்கினார். பொள்ளாச்சி கம்பன் கலை மன்ற தலைவர் கே.எம்.சண்முகம் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் நம் சம காலத்தில் வாழ்ந்த மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் எழுத்தாளுமை குறித்தும் அவர் பெற்ற சாகித்திய அகாடமி விருது குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் பல்வேறு இலக்கிய அமைப்புகளை சார்ந்தவர்களும் சமூக நல அமைப்புகளை சார்ந்தவர்களும் எடுத்துரைத்து புகழஞ்சலி செய்தனர்.
இதில் பொள்ளாச்சி இலக்கிய வட்ட செயலாளர் கவிஞர் இரா. பூபாலன், தலைவர் அம்சப்ரியா, நகர மன்ற உறுப்பினர் ஆண்டாள் அறக்கட்டளை தலைவர் எம்.கே.சாந்தலிங்கம், பொள்ளாச்சி சதுரங்க சங்க செயலாளர் பரமேஸ்வரன், எம்.ஆர்.எம்.பவுண்டேஷன் இயக்குனர் ஸ்ரீ வீனா யாழினி மற்றும் முதலுதவி சமூக நல அறக்கட்டளை தலைவர் முனைவர் அபு. இக்பால், சேவாலயம் அறக்கட்டளையின் செயலாளர் ஞானசேகரன், வெண்ணிலா திரைக்கள அமைப்பு தலைவர் வெண்ணிலா ரவிக்குமார், வங்கி ஊழியர் சங்க நிர்வாகி ரகுபதி, பட்டாம்பூச்சி குழுமத்தை சேர்ந்த கலைவாணி, கே பிரதீப் குமார் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் வாசகர்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் பட்டாம்பூச்சி எப்ஃஎம் செய்தி தொடர்பாளர் முனைவர் கிருஷ்ணா கணேஷ் நன்றி கூறினார்.



