சுசீந்திரம், நவ. 17 –
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் அரசர்களால் கட்டப்பட்ட பழமையான கோவில் இந்த கோவில் தெப்பக்குளத்தை ஒட்டி கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றை நாழிக்கிணறு என்றும் அபிஷேக கிணறு என்றும் பொதுமக்கள் அழைக்கின்றனர். அக்காலத்தில் தெப்ப திருவிழா நடைபெறும்போது அரசர் தெப்பத் திருவிழாவை காண்பதற்காக தங்குவதற்கான ஒரு அறையும் அதனை ஒட்டி ஒரு கிணறும் உள்ளது.
இந்தக் கிணறு தெப்பக்குளத்தை ஒட்டி அமைந்துள்ளது. இந்த நீரானது தெளிந்த பன்னீர் போல காணப்படுகின்றது. இந்த தண்ணீரானது தாணுமாலய சுவாமி கோவில் அபிஷேகத்திற்கும் சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்வதற்கும் மட்டும் இந்த நீர் பயன்படுத்தப்படுகின்றது. இந்த நீரை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என அறிவிப்பு செய்துள்ளனர். இந்தக் குளம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் வடக்கு பகுதியில் ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து வடக்கு ரதவீதி வரும் பகுதி அருகே இந்தக் குளம் செல்லும் பாதை உள்ளது. அரசர் அமர்ந்து தெப்ப திருவிழாவை காண்பதற்கான கல் மண்டபமும் உள்ளது.
எனவே இந்த அபிஷேக கிணறையும் கல் மண்டபத்தையும் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இந்த தெப்பக்குளத்தில் நீர் சுமார் 6 அடி ஆழத்திற்கு உள்ளது. குளத்திற்கு செல்லும் பாதை கதவு வெளிநவர் சென்று குளநீரை மாசுபடுத்தி விடக்கூடாது என்பதற்காக அடைத்து உள்ளது. பூஜைக்கு வேண்டிய நீரை எடுப்பதற்கு மட்டும் கதவு திறக்கப்பட்டு கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



