By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சாமி தரிசனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சாமி தரிசனம்
இநஂதியாதமிழ்நாடுமாநிலம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சாமி தரிசனம்

Last updated: October 22, 2025 6:17 pm
October 22, 2025
40 Views
Share
SHARE

திருவனந்தபுரம், அக். 22 –

ஜனாதிபதி திரவுபதி முர்மு கேரளாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.
இதற்காக நேற்று மாலை 6.20 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த அவருக்கு விமான நிலையத்தில் கேரளா கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அன்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கிய ஜனாதிபதி, இன்று காலை 9.35 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சபரிமலை புறப்பட்டு செல்வார் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் 2 மணி நேரம் முன்பாக 7.30 மணியளவில் கவர்ணர் மாளிகையில் இருந்து புறப்பட்டார். பின்னர் விமான படை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் சபரிமலை புறப்பட்டார்.

முதலில் நிலக்கல்லில் இறங்குவார் என அறிவிக்கப்பட்டு பின்னர் கோந்நி என்ற இடத்தில் உள்ள மைதானத்தில் இறங்கினார். அங்கிருந்து கார் மூலம் பம்பை சென்றடைந்தார்.

பம்பை கணபதி கோயிலில் வைத்து இருமுடி கட்டிய பின் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி இருமுடி கட்டை ஜனாதிபதி திரவுபதி முர்மு தலையில் வைத்தார். பின்னர் பம்பையில் கணபதி, அனுமான் கோவில்களில் தரிசனம் செய்த பின் ஜீப் மூலம் சன்னிதானம் சென்றார். அவருடன் கேரளா கவர்னர் விஸ்வநாத் ஆர்லேக்கர், அவரது மனைவி, கேரளா தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் உடன் சென்றனர்.

சன்னிதானத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு சபரிமலை தந்தரி கண்டரர் ராஜீவரர் தலைமையில் ஐயப்பன் கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து திரவுபதி முர்முவும் அவரது மெய்க்காவலர்களும் இருமுடி கட்டி சபரிமலை கோயிலில் 18ம் படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தார். இதையடுத்து சபரிமலை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி, ஜனாதிபதியிடம் இருமுடியை பெற்றுக் கொண்டார். சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில் தரிசனம்
திருச்சியில் காவல்துறை துணை ஆணையர்கள் மாற்றம்
களியக்காவிளை அருகே தென்னைமர மூட்டு பகுதியில் முளைக்கும் தென்னை கன்று; அதிசயமாக பார்க்கும் பொதுமக்கள்
விளாத்திகுளம் அருகே ஒரே ஒரு பள்ளி மாணவிக்கு இரண்டு ஆசிரியர்கள் பொதுமக்கள் குற்றச்சாட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

பாலக்கோடு அருகே 90 அடி ஆழ கிணற்றில் சிக்கிய டிரைவரும் நாயும் உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்

July 2, 2026
15 Views
தொழிற்சங்க பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தேரூர் பேரூராட்சி மூலம் ஆயிரம் மரக்கன்றுகளுக்கு மேல் நடவு செய்ய இலக்கு எல்லா பேரூராட்சிகளிலும் இதுபோல மரக்கன்றுகள் நடவு செய்ய பொதுமக்கள் கோரிக்கை
வளத்தூர் ஏரி ஆக்கிரமிப்பு – விவசாயிகள் வேதனை
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account