மார்த்தாண்டம், அக். 18 –
கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார் சட்ட மன்றத்தில் பேசியதாவது: மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே கன்னியாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி கொல்லங்கோடு நகராட்சி மிகப்பெரிய நகராட்சி. அதில் 50000 க்கும் மேலும் மக்கள் தொகை இருக்கிறது. அங்கு கடந்த 2024-ன் மானியக் கோரிக்கையிலா புதிய நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கு ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டது. அதற்கு நிலம் கையகப்படுத்தி கொடுக்கப்பட்டது. ஆனால் இவ்வளவு நாட்கள் ஆன பிறகும் இன்னும் துவங்கப்படாமல் உள்ளது. ஆனால் பணிகள் இன்னும் துவங்கப்படாமல் உள்ளது. எனவே அந்த பணியை சீக்கிரமாக துவங்கும் படி கேட்டு கொள்கிறேன் என கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு: உறுப்பினர் சட்டமன்றத்தில் தினந்தோறும் காலையில் என்னை பார்க்கிறார். அவர் தொகுதி என்றும் சொல்கிறார். இதை அவர் முதலிலேயே சொல்லியிருந்தால் நான் அதிகாரிகளிடம் எல்லா விவரங்களையும் கேட்டு கொண்டு வந்திருப்பேன். இருப்பினும் உறுப்பினர் கூறியது குறித்து அதிகாரிகளிடம் கலந்து பேசி அந்த பணிகள் எதனால் தாமப்பட்டிருக்கிறது? என்பதை அறிந்து தாமதத்தை நீக்கி உடன் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு கட்டுவதில் எந்தவித தடையும் இல்லை. அந்த பணிகளை துவங்குவதற்கு உடனடியாக நடவடிக்கையும் எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் நேரு கூறினார்.



