களியக்காவிளை, அக். 10 –
ஸத் வித்தியா அறக்கட்டளை சார்பில் செயல்படும் கோயில் தூய்மை பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு, அருள் வாக்கு கூறுவோர் ஒருங்கிணைப்பு குழுவின் துவக்க விழா மார்த்தாண்டம் கோதேஸ்வரம் கோயில் வளாகத்தில் அக்டோபர் 11-ம் தேதி நாளை நடக்கிறது. பூஜ்யஸ்ரீ சுவாமி பிரணவானந்த ஜி மஹாராஜ், ஆசியுடனும், குருநாதர் பிரும்ம ஶ்ரீ ஶ்ரீகுமாரன் போற்றி வழிகாட்டுதலின் கீழ் ஸத் வித்தியா அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.
இந்த அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்கள், அருள்வாக்கு கூறுபவர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் துவக்க விழா நிகழ்ச்சியில் ஸத் வித்தியா டிரஸ்ட் தலைவர் சேகர் போற்றி தலைமை வகிக்கிறார். ஜெகதிஷ் குமார், ராஜு சுந்தரம், ரெவீந்திர கிருஷ்ணன் வி எம்.டி., சுவாமி நாராயணன் நம்பூதிரி உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். இராதா டீச்சர், உஷா சேகர், ரெம்மியா சுபின், அம்பிகா ஸ்ரீகுமாரன் உள்ளிட்டோர் தீபம் ஏற்றி வைக்கின்றனர்.
அருணா ஸ்ரீகுமாரன் ஸ்ரீருத்திரா சேகர், சுருதி சுதாகர், ஸ்ரீரூபிகா சேகர், அபர்ணா இளம்கோ உள்ளிட்டார் இறை வணக்கம் பாடுகின்றனர். டிரஸ்ட் பொதுச் செயலாளர் ஶ்ரீ சுமேஷ் போற்றி வரவேற்கிறார். ஸத்வித்தியா தலைமை ஆச்சாரியர் பிரம்ம ஸ்ரீ ஸ்ரீகுமாரன் போற்றி தலைமையுரை வழங்குகிறார். பூஜ்ய ஶ்ரீ சுவாமி பிரணவானந்த ஜி மஹாராஜ் ஆசியுரை கூறி உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைக்கிறார். தொடர்ந்து ஈஷா தன்னார்வலர் மணிகண்ட பிரபு சிறப்புரை ஆற்றுகிறார். சந்தோஷ் போற்றி பிரார்த்தனை செய்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஸத்வித்தியா அறக்கட்டள நிர்வாகிகள், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்கின்றனர். சுபின் பேற்றி நன்றி கூறுகிறார்.


