ஸ்ரீவில்லிபுத்தூர், அக். 09 –
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா வத்திராயிருப்பு ஒன்றிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் 67 பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவ “எண்ணும் எழுத்தும்” இரண்டு நாள் பயிற்சி கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் விஜயலட்சுமி,
அரவிந்தன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த பயிற்சியில் 217 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் மாவட்டத்
திட்ட அலுவலர் திருக்குமரன், ஒருங்கிணைப்பாளர் தங்கவேலு, பார்வையிட்டனர். பயிற்சியில் குழந்தைகளின் கற்றல் இடைவெளியைச் சரிசெய்ய வேண்டிய செயல்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. குழந்தைகள் பாடப்பகுதியை ஆர்வத்தோடு படிக்கும் வகையிலும் குழந்தைகளின் எதிர்பார்ப்பு, உரிய கற்றலை குழந்தைகள் பெறும் வகையிலும், மொழிக் கூறுகளில் குழந்தைகள் தெளிவு பெறும் வகையிலும் வகுப்புக்கேற்ற பாடத்திறன்களை பெறும் வகையிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் பயிற்றுநர்கள் ராஜா, செல்வி, உமா மகேஸ்வரி, ஜெயலட்சுமி ஆகியோர் பயிற்சிகளை வழங்கினர்.
ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி அவர்களின் வழிகாட்டலின்படி வத்திராயிருப்பு வட்ட மைய மேற்பார்வையாளர் கணேஷ்வரி சிறப்பாக செய்திருந்தார்.



