மேடவாக்கம், அக். 07 –
செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கம் அனைத்து குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாட்டில் மேடவாக்கம் பெரிய ஏரியை தூர்வாரி பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் வகையில் பூரமைக்க தனியார் நிறுவனங்களின் சமூக மேம்பாட்டு நிதியில் இருந்து புதுப்பிக்கும் பணி ஃப்ளெக்ஸ் அறக்கட்டளையின் சிஎஸ்ஆர் நிதியின் சார்பில் மற்றும் தாகம் அறக்கட்டளை மேடவாக்கம் வழிகாட்டுதலின்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. அதன்படி ரூ.50 லட்சம் மதிப்பபீட்டில் ஏரி தூர்வாரப்பட்டு ஆகாயதாமரை அகற்றி ஏரியை சுத்தம் செய்தனர்.
மேலும் ஏரியை சுற்றி பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காக நடைபாதை அமைத்தும், ஏரியை ஆக்கிரமிப்பு செய்யத வகையில் சுற்று வேலி அமைத்தும் கொடுக்கப்பட்டனர். இந்த நிலையில் பணிகள் நிறைவடைந்த நிலையில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். அரவிந்த் ரமேஷ் புதுபிக்கப்பட்ட ஏரியை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதில் முதியோர் மாற்றும் திறனாளிகளள் செல்வதற்கான வீல் சேரி டிரம்புடன் கூடிய வீல்சேர் வசதி, திறந்த வெளி ஜிம், மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் விளக்க பலகைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் நல சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்



