மதுரை, அக். 02 –
மதுரை அண்ணாநகர் தனிஷ்க் ஜுவல்லரி ஷோரூமில் பண்டிகை கால எக்ஸ்சேஞ்ச் அறிமுக விழாவில் பங்கேற்ற டைடன் கம்பெனி லிமிடெட்-ன் ஆபரண பிரிவின் தலைமை செயலாக்க அதிகாரி அஜாய் சாவ்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பழைய தங்க நகைகளை மாற்றுவதன் ஆற்றல் அபரிமிதமானது. தனிப்பட்ட மகிழ்ச்சியோடு தேச நலனிற்கு ஆதரவளிக்கும் தாக்கமும் ஒன்றாக இதில் இணைந்திருக்கிறது. பல்வேறு வகை கேரட்டேஜ்களிலும் மிக குறைவானதிலும் கூட இந்த பண்டிகை காலத்திற்காக முதன்முறையாக நாங்கள் வழங்கும் 0% பிடித்தம் என்ற சலுகைத் திட்டத்தின் மூலம் நமது நாட்டை சுயசார்புள்ளதாக மாற்றும் மகத்தான இலட்சிய திட்டத்தில் ஒவ்வொரு இந்தியரும் பங்கேற்பதை நாங்கள் மிக எளிதானதாக ஆக்குகிறோம்.
மேலும் டாடா குழுமத்தின் ஒரு அங்கமான தனிஷ்க் இந்தியாவில் அதிக நம்பிக்கைக்குரிய ஆபரண பிராண்டாக திகழும் நிலையில் இந்நாட்டில் பழைய தங்க நகைகளை புதிய நகைகளாக மாற்றும் இந்நாட்டின் மிகப்பெரிய இயக்கத்தை தொடங்கி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இந்தியாவின் உண்மையான தங்க இருப்புகள் தங்கச் சுரங்கங்களில் இல்லை. மாறாக நாடெங்கிலும் உள்ள இந்திய மக்களின் வீடுகளில் தான் அவைகள் இருக்கின்றன.
குறிப்பாக இந்தியாவில் உள்ள இல்லங்களில் மட்டும் சுமார் 25,000 ஆயிரம் டன்கள் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் அந்த பிரமாண்டமான சொத்தும், வளமும் பெரும்பாலான நேரங்களில் வீடுகளுக்குள்ளேயே வேறு ஆதாயப்பலன்களை வழங்காமல் பூட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. எனவே பழைய தங்க நகைகளை புதிய, நவீன வடிவமைப்புகளாக மாற்றிக் கொள்வதன் மூலம் நம் நாடு தங்க இறக்குமதிக்காக பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையை குறைக்கிறது.
மேலும் பிரபல ஆளுமையான கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உடன் தனிஷ்க் இணைந்திருக்கிறது. 2025 அக்டோபர் 21-ம் தேதி வரை அனைத்து கேரடேஜ்களிலும் குறைந்த அளவு வரை பழைய தங்க நகைகளை மாற்றும் போது பூஜ்ய (0%) பிடித்தம் என்ற சிறப்பு சலுகையை நுகர்வோர்களுக்காக தனிஷ்க் முதன் முறையாக வழங்குகிறது. தனிஷ்க் -ன் தங்க பரிமாற்ற திட்டத்தில் 30 இலட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பங்கேற்று ஏறக்குறைய 1.7 இலட்சம் கிலோ தங்கத்தை மறுசுழற்சி செய்திருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.



