கிருஷ்ணகிரி, செப். 29 –
நடைபெற்ற தொகுதி-II (GROUP-II & GROUP-II A )- க்கான முதல்நிலைத் எழுத்து தேர்வு எழுத 11,039 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவற்றில் 8,172 நபர்கள் தேர்வு எழுதினர். 2,867 நபர்கள் (ABSENT) தேர்வு எழுத வரவில்லை. கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-II (GROUP-II & GROUP -II A )க்கான முதல்நிலைத் எழுத்து தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள் (தொகுதி – II மற்றும் தொகுதி II A) (OMR Method) தேர்வு 31 தேர்வுக்கூடங்களில் இன்று நடைபெற்றது.
இத்தேர்வு பணிகளை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் 3 பறக்கும் படை அலுவலர்கள் (Flying Squad), ஒவ்வொரு வட்டத்திலும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அலுவலர்கள், 11 நடமாடும் அலகு அலுவலர்கள் (Mobile Unit), 31 ஆய்வு அலுவலர்கள் (Inspection staff) மற்றும் 31 வீடியோகிராபர்கள் (videographer) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து தேர்வு மையங்களில் மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதி மற்றும் நடமாடும் மருத்துவக்குழுக்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி II மற்றும் தொகுதி II A க்கான எழுத்துத்தேர்விற்கு 11,039 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவற்றில் 8,172 நபர்கள் தேர்வு எழுதினர். 2,867 நபர்கள் (ABSENT) தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இவ்வாய்வின் போது கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் (பொ) தனஞ்செயன், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் சின்னசாமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.



