கிருஷ்ணகிரி, செப். 24 –
கிருஷ்ணகிரி அரசு மகளீர் கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவிக்கான கலைத் திருவிழா மற்றும் தற்காப்பு திறன் குறித்த பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் கீதா தலைமையில் இரண்டு நாள்கள் நடைபெற்றது. மாணவிகளுக்கு இடையே கலைத் திறனை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்று வரும் இந்த கலைத் திருவிழாவில் மொழித்திறன், தற்காப்புதிறன், இசைத் திறன், மெய்ப்பாட்டுத்திறன், காட்சி திறன், தனித்திறன், இயற்கை சீற்றம் போன்ற 7 தலைப்புகளில் 32 போட்டிகள் நடைபெற்றது.
இதில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு தற்காப்பு கலைகளின் ஒன்றான சிலப்பம் போன்ற கலைகளில் தனிக்கவனம் செலுத்தினார்கள். மேலும் மாணவிகளின் கலைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த கலைத் திருவிழாவில் முனைவர் கனகலட்சுமி, கலைப்பண்பாட்டுத் துறை ஞானசத்தி, மாவட்ட திட்ட அலுவலர் ஞான சத்தி, தமிழ்நாட்டியாலய மதுமொழி ஆனந்த் மற்றும் ராதை ரமேஷ், சிவபாலம்பிகை ஈஸ்வரி, உடற்கல்வி ஆசிரியர்கள் கிருஷ்ண ராஜ், முருகன், இந்துமதி மற்று சிலம்பம் ஆசிரியர் குருராகவேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு கலைப்பயிற்சிகளை மேற்கொண்டனர்.



