நாகை, செப்டம்பர் 20 –
காரப்பட்டு யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்லூரியின் இயற்பியல் வேதியியல் துறை மற்றும் உயிரியல் துறையுடன் கலிலியோ வாசன் நீர்நிலை பெட்ரோலியம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி மற்றும் இரண்டு நாள் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனர் மற்றும் முதல்வர் முனைவர் க. அருள் மற்றும் துணை முதல்வர் முனைவர் சி. வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கல்லூரியின் இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் கலிலியோ வாசன் ஆராய்ச்சி நிறுவன உரிமையாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் துறை மாணவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு தொழில் துறை பயிற்சிகள் மற்றும் அவற்றின் கட்டமைப்பு தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இரண்டு நாள் செயல்முறை விளக்கமாக பெட்ரோலியம் ஆய்வு, பெயிண்ட் தயாரிப்பு மற்றும் கடல் நீர் ஆராய்ச்சி முறை ஆகியவை செய்முறை விளக்கமாக பயிற்சி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் அனைத்து பேராசிரியர்களும் செய்திருந்தனர்.



