ஈரோடு, செப். 19 –
இந்து முன்னணி நிறுவனர் இராம கோபாலன் 98-வது பிறந்த தினம் இந்து எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈரோடு மாநகர் மாவட்டம் முழுவதும் பல்வேறு முக்கிய இடங்களில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
மாவட்ட செயலாளர்கள் சங்கர், வக்கீல் முரளி, ரமேஷ், விவேக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன், மாவட்ட துணைத்தலைவர் சண்முகம் மற்றும் நகர் ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்
ஜெகதீசன் கலந்து கொண்டு ராம் கோபாலன் படத்துக்கு மாலை அணிவித்தார்.



