தஞ்சாவூர், செப்டம்பர் 18 –
தஞ்சாவூரில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு வைப்பு அறையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு வைப்பு அறைக் கிடங்கு அமைந்துள்ளது. அதில் தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அஞ்ச்சனா பட்நாயக், மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் காலாண்டு ஆய்வு நடந்தது.
ஆய்வில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு வைப்பு அறையில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமரா, தீயணைப்பான் கருவிகள், உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணிகள் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் 1200 க்கு மேல் வாக்காளர் கள் உள்ள வாக்கு சாவடி நிலையங்களை மறுசீரமைப்பது மற்றும் இதர தேர்தல் பணிகள் குறித்த பணி முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கும்பகோணம் சப் கலெக்டர் ஹிருத்யா விஜயன், உதவி கலெக்டர் (பயிற்சி) கார்த்திக் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



