புதுச்சேரி, செப் 06 –
புதுச்சேரி சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜிவ் லோச்சன்
பேசுகையில்: 1969-ல் நிறுவப்பட்ட புதுச்சேரி கிளை, புதுச்சேரியில் நிதிச் சேவைகளை மக்கள் எளிதாகப் பெறுமாறு கொண்டு போய் சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளது. பெரும்பாலும் பிரதான நிதி நிறுவனங்களின் சேவைக்கு அப்பாற்பட்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு முக்கியமாக சேவையாற்றி வந்திருக்கிறது. சிறு வணிக உரிமையாளர்கள், முதல் முறை கடன் பெறுவோர், சுயதொழில் வல்லுநர்கள் மற்றும் போக்குவரத்து வாகன நிறுவன உரிமையாளர்கள் என பல தரப்பினரும் நம்பகமான நிதி கூட்டாளியாக இந்தக் கிளையை கருதுகின்றனர். மேலும் இதன் நிதி சேவைகளின் மூலம் பயனடைந்திருக்கின்றனர்.
இந்தக் கிளை நிதி ஆதரவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது என்ற குறிக்கோளையும் கடந்து அதைவிட மேலானதாக வெளிப்படைத்தன்மை, கண்ணியம் மற்றும் மனிதாபிமான அணுகுமுறைக்காக வாடிக்கையாளர்களின் அசையா நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது. தலைமுறை தலைமுறையாக வாடிக்கையாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்களைக் கட்டமைக்கவும், நம்பிக்கையுடன் வாழவும் சுந்தரம் ஃபைனான்ஸ்-ன் இக்கிளை உதவியுள்ளது.
புதுச்சேரி கிளையின் பலம் அதன் பணியாளர்களிடம் தான் உள்ளது. பல பணியாளர்கள் தங்கள் பணிக்காலத்தின் (கரியர்) குறிப்பிடத்தக்க பகுதிகளை இங்கு செலவிட்டுள்ளனர்; திறமையுடன் மட்டுமல்லாமல், நேர்மை, புரிந்துணர்வு மற்றும் குறிக்கோளுடனும், அர்ப்பணிப்பு மிக்க சேவையை வழங்கியிருக்கின்றனர். வாடிக்கையாளர்களுடனான அவர்களின் பிணைப்பு வெறும் நிதி பரிவர்த்தனைகளுக்கும் அப்பாற்பட்டது; பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட வளர்ச்சியின் மீது கட்டமைக்கப்பட்ட நல்லுறவாக அது இருக்கிறது. இந்த மைல்கல் நிகழ்வானது ஒவ்வொரு சாதனைக்குப் பின்னாலும் அமைதியாக துணை நின்ற பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கௌரவிக்கிறது என்று கூறினார்.



