நாகர்கோவில் செப் 18
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலின் உட்பிரகாரம் அமைந்துள்ள திருவேங்கட விண்ணவப்பெருமாள் சுவாமிக்கு வருடம் தோறும் ஆவணி மாதம் கொடியேற்றுத்துடன் துவங்கி பத்து நாட்கள் வெகு விமர்சையாக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு ஆவணி திருவிழாவிற்காக கடந்த 9ஆம் தேதி காலை கொடியேற்று நடைபெற்றது கோடி பூஜைகள் செய்து மாத்தூர் மடதந்திரி சங்கர நாராயண கொடியேற்றினார் தொடர்ந்து தினந்தோறும் சுவாமிக்கு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெற்றது காலை மாலை வேளைகளில் பெருமாள் அம்பாள் ரத வீதியை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஒன்பதாம் திருவிழாவான நேற்று மாலை 5 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட சப்ரதேரில் திருவேங்கட விண்ணப்ப பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஆகியோரை வைத்து ரத வீதியை சுற்றி வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறுவர் சிறுமிகள் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர் நாளை திரு ஆராட்டு விழா நடைபெறுகிறது



