திருப்பத்தூரில் பெய்த கனமழையால் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 8 ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.
பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் மீன்பிடித்து உற்சாகம்.
வாணியம்பாடி, டிச.4- திருப்பத்தூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக விட்டு விட்டு பெய்த கன மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரி குளங்கள் நிரம்பியுள்ளது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 49 ஏரிகள் நிரம்பி உள்ளன.
இதில் திருப்பத்தூரில் உள்ள திருப்பத்தூர் பெரிய ஏரி உட்பட 8 ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.
இந்த நிலையில் 112 ஹெக்டேர் கொள்ளளவு கொண்ட திருப்பத்தூர் பெரிய ஏரி மற்றும் மடவாளம் ஏரியில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரில் உற்சாகமாக ஜப்பான் கண்டே, ஜிலேபி உள்ளிட்ட வகையான மீன் வகைகளை பிடித்து மகிழ்ந்தனர்.