நித்திரவிளை , பிப்-14
நித்திரவிளை அருகே நம்பாளி என்ற பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (60). இவரது மனைவி அம்பிளி கலா. தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். அம்பிளி கலா உடல்நல குறைவால் திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் பால்ராஜ் கடந்த 10-ம் தேதி மாலை மனைவியை கவனிக்க வீட்டை பூட்டி விட்டு மருத்துவமனைக்கு சென்றார். நேற்று மாலை 5 மணி அளவில் மறுபடியும் பால்ராஜ் வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த இருந்த ஏழு பவன் நகை திருட்டுப் போயிருந்தது. மேலும் ஏடிஎம் மற்றும் ஆதார் அட்டை போன்றவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.
இது சம்பந்தமாக பால்ராஜ் நித்திரவிளை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்