தருமபுரி
பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டு நலப்பணி திட்ட சார்பில் 7 நாள் முகாம் குண்டல்பட்டியில் நடைபெற்றது. இயக்குனர் பொறுப்பு முனைவர் மோகனசுந்தரம் தலைமையில், நாட்டு நலத்திட்ட அலுவலர் முனைவர் பிரசாந்த் விளக்க உரையாற்றினார். நிறைவு விழாவாக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக பிரபாகர் மற்றும் சுரேஷ்குமார் தன்னம்பிக்கை உரை ஆற்றினார்கள். மற்றும் முனைவர் அமுதா காளான் வளர்ப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். முனைவர் காமராஜர் நன்றியுரை நிகழ்த்தினார். ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.