கோவை டிச:07
பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் அமைந்துள்ள கேஷவ் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் 62 வது தேசிய சறுக்கு விளையாட்டு போட்டிகளுக்கான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகள் டிசம்பர் 5 முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த விளையாட்டுப் போட்டிகள் பற்றி பள்ளியின் தாளாளரும், தொழிலதிபருமான ஆர்.வி.எஸ். மாரிமுத்து அவர்கள் கூறுகையில் தமிழ்நாடு சறுக்கு விளையாட்டு போட்டிகள் சங்கம், கோவை மாவட்ட சறுக்கு விளையாட்டு போட்டிகள் சங்கம் மற்றும் கேஷவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இந்திய அளவில் அனைத்து மாநிலங்களை சார்ந்த சுமார் 4000 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். 5 கட்டங்களாக நடைபெறும் இந்த போட்டிகளை மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றார்கள்.
மேலும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா அவர்கள், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் அவர்கள், கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி, பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி. வி. ஜெயராமன், பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன், பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.