நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மனுநீதி நாள் முகாம் 46 .50 லட்சம் மதிப்பீட்டில் 69 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஊட்டி. பிப். 14.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதி குஞ்சப்பனையில் மக்கள் தொடர்பு மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. இதில் ரூ. 46..50 இலட்சத்தில் 69 பேருக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை அரசு உண்டு உறைவிட பள்ளியில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை தாங்கினார். பின்னர் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 2. பேருக்கு ரூ.5.60 மதிப்பில் கல்வி கடனுதவி பெறுவதற்கான ஆணை, வேளாண் பொறியியல் துறை சார்பில் இரண்டு பேருக்கு ரூபாய் 19..200 மதிப்பில் தேயிலை அறுவடை இயந்திரங்கள், தோட்டக்கலைத்துறை சார்பில் ஒருவருக்கு ரூ. 2 லட்சம் மதிப்பில் சிற்பம் கட்டும் அறை, பெறுவதற்கான ஆணை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இரண்டு பேருக்கு ரூ. 19.980 மதிப்பிலான தையல் எந்திரங்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 5 பேருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான மருந்து பெட்டகங்கள் ஐந்து பேருக்கு ரூபாய் 5. ஆயிரம் மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் உட்பட மொத்தம் 69 பயனாளிகளுக்கு ரூபாய் 16.49 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும் குஞ்சப்பனை பகுதியில் உள்ள உண்டு உறைவிட ஆரம்பப் பள்ளியில் மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் சமையல் கூடம் மற்றும் உணவுப் பொருட்களின் இருப்புகள் அட்டவணைப்படி உணவுகள் வழங்கப்படுகிறதா எனவும் மாணவ மாணவிகளின் கற்றல் திறன் எவ்வாறு உள்ளது என ஆய்வு செய்தார் . அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் ரூ. 9. 20 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மைய கட்டுமான பணிகளை பார்வையிட்டார். அதன் பின்னர் அந்தப் பகுதியில் நூலக கட்டிடம் ஆய்வகம் மற்றும் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு குஞ்சப்பனை அங்கன்வாடி மையத்தினை கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள குழந்தைகளின் எடை , உயரம், உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கூடுதல் கலெக்டர் கவுசிக், குன்னூர் சப் கலெக்டர் சங்கீதா, மற்றும் மாவட்ட வன அலுவலர் கௌதம் கோத்தகிரி தாசில்தார் ராஜலட்சுமி, கோத்தகிரி வனவர் செல்வராஜ் கட்டபெட்டு வனவர் செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆதிவாசி மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.