தஞ்சாவூர்.ஏப்ரல் 4.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் அறிவியல் தமிழ் மற்றும் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் கும்பகோணம் இணைந்து நடத்திய 31 வது பன்னாட்டு கருத்தரங்கம் வளர்த்தமிழ் புல கருத்தரங்க அறையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைப் பாளர் முனைவர் தியாகராஜன் நோக்கவுரையாற்றினார்.பதிவாளர் (பொ)பன்னீர்செல்வம், வளர்தமிழ் புலமுதன்மையர் முனைவர் குறிஞ்சி வேந்தன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்கள். மருதம் கலை இலக்கிய மன்ற பேராசிரியர் கணேஷ் மூர்த்தி முன்னிலை உரையாற்றினார்
சென்னை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் சு நரேந்திரன் தமிழில் அறிவியலும் தொழில் நுட்பம் என்ற நூலை வெளியிட்டார் நூலினை டாக்டர் சுந்தரேசன் பெற்றுக் கொண்டார்
முனைவர் பட்ட ஆய்வாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார் முலையர் பட்ட ஆய்வாளர் ஹரிப்பிரியா இணைப்புரை வழங்கினார்



