ஆக.4
திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அறிவொளி நகரில் உள்ள 300 ஆண்டு பழமை வாய்ந்த குமரன் குன்று என்று அழைக்கப்படும் செல்வ முத்துக்குமாரசாமி திருக்கோவில் சொந்தமான
2.40 ஏக்கர் இடத்தை
இலங்கை அகதிகள் முகாம் குடியிருப்புகள் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிந்துரை செய்துள்ளதாக வந்த தகவலை அடுத்து
முருகன் குன்று பகுதியில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் தலைமையில்
திரண்ட 100 -க்கும் மேற்பட்ட மக்கள் -கோவில் வளாகத்தில் பரபரப்பு போலீசார் குவிப்பு.
திருப்பூர் அருகே குமரன்குன்று முருகன் கோவிலில் ஆடி18 முன்னிட்டு திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமமக்களால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது,
இந்த கோவிலின் நுழைவு வாயிலில் சிவலிங்கமும்,விநாயகர் சிலையும் மூலவராக முருக பெருமான் குன்றின் மீது இருக்கக்கூடிய சிலையும் உள்ளது.
இந்த இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் சிலர் ஈடுபடுவதாக வந்த செய்தியை தொடர்ந்து கிராம மக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் கோவில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர் அதனை தொடர்ந்து அங்கு அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இன்று குமரன் குன்று இருக்கும் முருகன் கோவிலில் அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது.
திருப்பூர் அருகே
ஈட்டி வீரம்பாளையம் பகுதியில் உள்ள
கிரிவல பாதை உள்ள இந்த குமரன் குன்று அழைக்கப்படும் முருகன் கோவில் 300 ஆண்டு காலம் பழமையான திருக்கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்றுவட்டார பகுதி மக்கள் அறிவொளி நகர் ஈட்டிவீரம்பாளையம் பட்டம்பாளையம் தொரவலூர் சொக்கனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோவில் நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் சிலர் அத்துமீறி சுற்றுப்பகுதியில் உள்ள வேலியை உடைத்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் அவர்கள் மீது பெருமாநல்லூர் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த முருகன் குன்று என்கிற முருகன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை மாவட்ட நிர்வாகம் இலங்கை அகதிகள் முகாம் குடியிருப்பு அமைப்பதற்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இதற்கு இந்து முன்னணி சார்பில் கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த முருகன் கோவில் இடத்தை இந்து சமய அறநிலைத்துறையினர் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.