தக்கலை, டிச- 18
புலியூர்குறிச்சி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜில் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே 3 பேர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். வாகனத்தை நிறுத்தும்படி போலீஸ் கை காட்டியும் மோட்டார் சைக்கிளை நிறுமல், கைகாட்டிய போலீஸ் மீது மோட்டார் சைக்கிளை மோதி விட்டு நிற்காமல் சென்றனர். இதில் போலீஸ் ஏட்டு கீழே விழுந்து காயம் அடைந்தார்.
போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு இடையில் மூன்று வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அவர்களை போலீசார் தேடி வந்தனர். அவர்கள் வந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்தும், சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர். இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் விவரம் தெரிய வந்தது.
அதன் பேரில் நேற்று று (17-ம் தேதி) அதிகாலை 4:00 மணிக்கு மேக்காமண்டபம் பகுதிக்கு போலீசார் வரைந்து சென்று குமரன்குடி விளையை சேர்ந்த ரோஹித் குமார் (22), அன்சில் (26), நிகேஷ் (23) ஆகியோரை கைது செய்தனர்.