சென்னை, ஜன-07 , தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பின் 22 வது ஆண்டு விழா மற்றும் நுகர்வோர் பொறுப்புகளும் கடமைகளும் என்ற விழிப்புணர்வு முகாம் சென்னை வேப்பேரி சால்வேஷன் ஆர்மி சோசியல் சர்வீஸ் எச்.ஆர் .டி சென்டர் கூட்ட அரங்கில் நடைபெற்றது .
பேரமைப்பின் தலைவர் செ . பால்பர்ணாபாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜி. தமிழ்ச்செல்வன் வரவேற்புரை நிகழ்த்தினார். சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பி .சதீஷ்குமார், உலக தமிழ் பல்கலைக்கழக இந்திய ஒருங்கிணைப்பாளர் பெருமாள்ஜி முன்னிலை வைத்தனர்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி எஸ் .கே .கிருஷ்ணன், பெருநகர சென்னை காவல் துறை இணையதள குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜரினா பேகம் இணையதள குற்றங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வெளியிட்டு உரையாற்றினார்.
மேலும் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையம் உதவி செயலாளர் எஸ் . ஸ்ரீதரன், திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ், எழுத்தாளர் அனிதா கே . கிருஷ்ணமூர்த்தி, சென்னை பிரஸ் கிளப் பொதுச் செயலாளர் விமலேஸ்வரன், மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்னாள் முதல்வர் கனகசபை உள்ளிட பேரமைப்பின் மாநில ,மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் .
பேரமைப்பின் தலைவர் பால் பர்ணபாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது :-
இன்றைய கூட்ட முகாமில் சாலை பாதுகாப்பு விழிப்புண் வு, பயணப் பாதுகாப்பு ஆலோசனைகள், உணவு பாதுகாப்பு பற்றி துறை சார்ந்த ஆளுமைகளை கொண்டு உரை நிகழ்த்தப்பட்டது.
மேலும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிலிருந்து தமிழக எல்லையில் மருத்துவ கழிவுகளை கொட்டி சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் இச்செயலை கண்டித்து தமிழக அரசுக்கு அறிவுறுத்தியதின் பேரில் அக்கழிவுகளை திருப்பி அனுப்பட்டது. அதேபோல் நுகர்வோர் நீதிமன்றத்தில் நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில் தாமதமாகிறது.
ஆகவே நுகர்வோர்க்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் குற்றங்களுக்கு வழக்குகள் பதிய நுகர்வோர்கள் தயக்கம் காட்டுகிறார்கள்.
இதனால் மேன்மேலும் தவறுகள் நடக்கும் சூழல் தொடர்ந்து கொண்டே இருக்கும் இதை கருத்தில் ல் கொண்டு நுகர்வோர் நீதிமன்றங்கள் வழக்குகளை விரைந்து முடிக்க ஆவணச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.