குளச்சல், மே- 19.
வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (32). கூலித் தொழிலாளி. இவருக்கும் ஈத்தங்காடு பகுதி சேர்ந்த அபினேஷ் (20 ) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவ தினம் அபினேஷ், மணிகண்டன் வீட்டு அருகே தனது பைக்கில் அதிவேகமாக சாலையில் சென்றுள்ளார். இதை மணிகண்டன் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அபினேஷ் தனது நண்பர்கள் ஆன வெள்ளை மோடி பகுதியை சேர்ந்த மற்றொரு அபினேஷ் (24), அஸ்வின் (19) ஆகியோருடன் வந்து தகராறு செய்து மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை குத்தி உள்ளார்கள். இதை தடுக்க வந்த மணிகண்டனின் தந்தை வேலப்பன் (79) என்பவரையும் குத்தினர். காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் அபினேஷ் அவரது நண்பர்கள் மற்றொரு அபினேஷ், அஸ்வின் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதில் அஸ்வின் தவிர மற்ற இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.