மதுரை, செப். 08 –
மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே நான்கு வழிச்சாலையில் அருகிள் உள்ள KMR சர்வதேச பள்ளியின் தாளாளர் டாக்டர். பி. கிருஷ்ணவேணி தலைமையில் பள்ளி முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் டாக்டர். கே. சரஸ்வதி, மூத்த முதல்வர் விஜயா சுந்தர் ஆகியோர் முன்னிலையில் பள்ளி மாணவ, மாணவிகள் ஒன்றினைந்து 2.5 லட்சம் விதைப் பந்துகள் மற்றும் 5000 வளர்ப்பு பைகைளைத் தயாரிப்பு செய்து உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தொடக்கப் பள்ளி இணை இயக்குநர் சுவாமிநாதன் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து பள்ளி தாளாளர் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக பேசுகையில்: பெருமைமிக்க நற்பெயரைப் பெற்று கல்வியில் சிறந்து விளங்குவதோடு எங்கள் மாணவர்கள் தன்னம்பிக்கை, வாழ்க்கைத் திறன்கள் மற்றும் உண்மையான உலகில் வெற்றிபெற அவர்களைத் தயார்படுத்தும் மதிப்புகளையும் பெறுகிறார்கள். குழந்தைகளை ஆதரவான சூழலில் வளர்த்து பொறுப்புள்ள உலகளாவிய குடிமக்களாக வளர அவர்களை அதிகாரம் அளிப்பதே எங்கள் தொலைநோக்குப் பார்வை.
எங்கள் பள்ளியின் 11-வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஒரு பகுதியாக மூன்று பிரிவுகளில் உலக சாதனை நிகழ்வை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த சாதனை முயற்சிகள் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றால் சான்றளிக்கப்படும்.
மேலும் சுற்றுச்சூழல் சார்ந்த பதிவுகளை நாம் ஏன் தேர்ந்தெடுத்தோம்? விதை பந்து தயாரித்தல் மற்றும் வளர்ப்புப் பைகள் நடவு மூலம் மாணவர்களை சுற்றுச்சூழல் பொறுப்புள்ள குடிமக்களாக மாற்ற ஊக்குவிக்க நாங்கள் இலக்கு வைத்துள்ளோம். இந்த நடவடிக்கைகள் காலநிலை மாற்றம், காடழிப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பரப்புவதோடு குழுப் பணி மற்றும் விடாமுயற்சி போன்ற பொறுப்பை வளர்க்கின்றன.
பல்லுயிர் பாதுகாப்பு, நகர்ப்புற விவசாயம் மற்றும் பசுமை தமிழ்நாடு மிஷன் திட்டத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக சுமார் 2,500 மாணவர்கள், பெற்றோர்கள், தாத்தா, பாட்டி, ஆசிரியர்கள் மற்றும் கேஎம்ஆர் குடும்பத்தினர் ஒன்றிணைந்து சுமார் 2.5 லட்சம் விதைப் பந்துகள் மற்றும் 5,000 வளர்ப்புப் பைகளைத் தயாரிப்பு செய்து பசுமையான, நிலையான எதிர்காலத்திற்கு பங்களிக்கும் வகையில்
ஏற்படுத்தி வருகின்றனர் என்று கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.



