இந்தியாவின் தலைசிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவரும் அரசியல், சமூகம், இலக்கியம் என அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தவருமான பண்டித் தீனதயாளன் 185வது பிறந்தநாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை பாஜக மாவட்ட துணை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பன்டித் தீனதயாளன் உருவப்படத்திற்கு பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களுக்கு பாஜக உறுப்பினர் சேர்க்கை மாவட்டத் துணைத் தலைவர் மோடிக் கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் இனிப்புகளை வழங்கினர். மேலும் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 25 வது வார்டில் 50க்கும் மேற்பட்ட நபர்களை பாஜகவில் இணைத்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் நாஞ்சில் பாலு, கோவி சேதுராமன், ஐ டி சதீஷ் பாபு, செல்வகுமார், ஐயா சுரேஷ், ஜீவானந்தம், மகளிர் அணி ஜெயப்பிரியா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து



