நாகர்கோவில் அக் 19
குமரி மாவட்டத்தில் பழுதடைந்து மழைக்காலங்களில் ஒழுகும்,ஓட்டை அரசு பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் இயக்க வேண்டும், அதேபோன்று மாவட்டத்தில் உள்ள சேதமடைந்த,வாகனங்கள் செல்ல முடியாத உள்ள சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும் என குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து மாவட்ட பஞ்சாயத்து தலைவரும் திட்டக்குழு தலைவருமான.மெர்லியண்ட் தாஸ் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் நடைபெறும் பஞ்சாயத்து கூட்டத்தில் கலந்துகொண்டு மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் ஆட்சியர் முதல் அனைத்து துறை அதிகாரிகளும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற 18 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.