சென்னை,ஜன- 25, பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் த்தின் 14வது பட்டமளிப்பு விழா வண்டலூர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இப்பட்டமளிப்பு விழாவில் 59 முனைவர் பட்டம், 708 முதுநிலை மற்றும் 1751 இளநிலை பட்டதாரிகள், 1751 பேர் பட்டம் பெற்றனர்.
முதல் இடங்களைப் பெற்ற 65 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில், 38 மாணவர்கள் இளங்கலை பட்டமும், 27 மாணவர்கள் முதுகலை பட்டதாரியும், 687 மாணவர்கள் நேரிலும், 1830 மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் எஸ்.டி.க்யூ.சி இயக்குநரகத்தின் தலைமை இயக்குநர் எம்.வெள்ளைப்பாண்டி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் பி.எஸ்.ஏ.சி.எஸ் வேந்தர் குர்ரத் ஜமீலா, இணை வேந்தர் அப்துல் காதிர் ஏ.ரஹ்மான் புஹாரி, துணைவேந்தர் டாக்டர் த.முருகேசன், இணை துணைவேந்தர் டாக்டர் என்.தாஜுதீன், பதிவாளர் டாக்டர் என்.ராஜா ஹுசைன் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்