தஞ்சாவூர், ஜூன் 9 –
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் 12 ஆம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்த 14 பள்ளிகளுக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார். இதன்படி திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் உள்ள மேல திருப்பந்துருத்தி பள்ளிக்குத் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி ஆகியோர் நேரில் சென்று ஆசிரியர்களைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலர் கௌதமன், பேரூர் செயலர் அகமது மைதீன் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.