நிலக்கோட்டை செப்.30:
திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் பல்கலைக்கழக மாலை நேர கல்லூரியில் அன்னை அகாடமி சார்பில் நடந்த விழாவில் 11-பேராசிரியர்களுக்கு சிறந்த பேராசான் விருது.
மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் பேராசிரியர்களை தேர்ந்தெடுத்து கௌரவிக்கும் விதமாக
கல்லூரியில் நடந்த விழாவில் அன்னை அகாடமி சார்பில் 11-பேராசிரியர்களுக்கு சிறந்த பேராசான் விருது வழங்கப்பட்டது,
அந்த வகையில் சிறப்பாக பணியாற்றி வரும் பேராசிரியர்களை கௌரவப்படுத்தும் விதமாக சிறந்த பேராசான் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குனர் மேகராஜன் தலைமை வகித்தார், ஆடிட்டர் சரவணப்பெருமாள், மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாலை நேர கல்லூரியின் பேராசிரியர் மகேந்திர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
இதனைத் தொடர்ந்து
திட்ட இயக்குனர் காசிமாயன் வரவேற்றார்,
நிகழ்ச்சியில் மாவட்டத்திலுள்ள பல்கலை மற்றும் கல்லூரிகளில் சிறப்பாக பணியாற்றிய 11 பேராசிரியர்களுக்கு சிறந்த பேராசான் விருது மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தினர், மேலும் இந்நிகழ்ச்சியில் தனியார் கல்லூரி முதல்வர் வெற்றிவேல் உட்பட
பல்வேறு பள்ளி கல்லூரி பல்கலைகழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழா நிறைவில் ஆசிரியர் செந்தாமரைக்கண்ணன் நன்றியுரையாற்றினார்.