கமுதி, ஜூன் 28 –
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள தனியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்
10-ம் வகுப்பு படித்து வரும் மாணவனுக்கு அப்பள்ளியின் விடுதி காப்பாளர் இளைஞர் கவியரசன் (23) பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவனின் தாய் ராஜலெட்சுமி நேற்று முன்தினம் கமுதி மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விடுதி காப்பாளர் கவியரசன் கைது செய்யப்பட்டு மேற்படி குற்றவாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


