நாகர்கோவில், ஜூன் 26 –
அரசு தேர்வுகள் இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 10ம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு துணை தேர்வு எழுத விண்ணப்பித்த தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது தேர்வு கூட நுழைவு சீட்டுகளை 25-06-2025 புதன்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேல்நிலை முதலாமாண்டு செய்முறை தேர்வுக்கான தேதி குறித்த விபரங்களை தனித் தேர்வுகள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வு கூட நுழைவு சீட்டு இன்றி எந்த ஒரு தேர்வர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். 10ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் ஜூன் 26 முதல் 28 சனிக்கிழமை வரையிலான நாட்களில் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. மேலும் இந்த தேர்வர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ள பள்ளிகளின் விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களை அணுகி பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். 10ம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு துணை தேர்வின் தேர்வு கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.