வேடசந்தூர், செப். 20 –
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி வடமதுரை பேரூராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்து சிறப்பித்தார். வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். காந்தி ராஜன் முகாமில் வழங்கப்படும் முக்கிய சேவைகள் கண், பல், காது, மூக்கு,தொண்டை மருத்துவம், மகப்பெறு பிரிவு, ஸ்கேன், குழந்தைகள் மருத்துவம், எலும்பு மற்றும் பிசியோதிரபி, நுரையிரல் பிரிவு மற்றும் மனநலம், நரம்பியல் & ஊனமுற்றோர், கர்பிணி, பொது மருத்துவம் இருதயம் மற்றும் கருப்பை வாய் பரிசோதளை, நுரையிரல் & அறுவை சிகிச்சை, தோல் மருத்துவம் என பல்வேறு வகையான அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவ சேவைகளை பொதுமக்கள் ஒரே இடத்தில் பெறும் வாய்ப்பை பெற்றிருக்கின்றனர்.
இந்நிகழ்ச்சிகள் வடமதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையன் வடமதுரை பேரூர் கழக செயலாளர் கணேசன், அயலூர் பேரூராட்சி மன்ற தலைவர் கருப்பண்ணன்,
அரசு சிறப்பு மருத்துவர்கள், துறை சார்ந்த அரசு அதிகாரிகள், ஒன்றிய மற்றும் பேரூராட்சி கழக செயலாளர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், கழகத்தின் மாவட்ட, ஒன்றிய, பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பயனாளர்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.



