அழகிய மண்டபம், ஜூலை 29 –
பொன்மனையில் விவசாயி வீட்டில் ரப்பர் ஷீட் திருடி கொலை மிரட்டல் விடுத்த இளைஞருக்கு முன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி பத்மநாபபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பொன்மனை மங்கலம் பகுதியை சார்ந்த பிரபாகரன் நாயர்மகன் பாலசந்திரன் நாயர் (வயது 66) இவர் கடந்த 30.1.2024 ம் தியதி தனது வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு கடைக்கு சென்று விட்டு திரும்பி வரும் வரும்போது திற்பரப்பு நக்கிராண்டி விளை பகுதியை சார்ந்த அச்சுதன் மகன் ஜெகன் (40) என்பவர் பாலசந்திரன் நாயர் கழுத்தில் கத்தியை வைத்து உன் வீட்டில் ரப்பர் சீட் திருடியதை போலிஸில் புகார் கொடுப்பியா என்று கேட்டு அவரின் சட்டை பையில் இருந்த ருபாய் 450 எடுத்து விட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.
இச்சம்பவம் குறித்து பாலசந்திரன் நாயர் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த போலிசார் குற்றவாளி ஜெகனை கைது செய்தனர். அவர் கூறிய தகவலின் பெயரில் காப்பு காடு மாராயபுரம் பாறவிளை பகுதியை சார்ந்த பாலைய்யன் மகன் மகேந்திரகுமார் (51) அவரும் இச்சம்பவத்திற்க்கு தொடர்பு உண்டு என்று கூறியதால் இரண்டாவது குற்றவாளியாக மகேந்திரகுமாரயயும் சேர்க்கப்பட்டு போலிசார் இருவரையும் கைது செய்தனர்.
இவ்வழக்கு பத்மநாபபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசராணை செய்த மாவட்ட அமர்வு நீதிபதி பரமசிவதாஸ் முதல் குற்றவாளி ஜெகன் க்கு முன்று பிரிவின் கிழ் முன்று வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும் ருபாய் முவாயிரம் அபராதவும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இரண்டாவது குற்றவாளி மகேந்திரகுமார் மீது அரசு தரப்பில் குற்றம் நிரூபிக்காத காரணத்தால் அவர் விடுதலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பெஞ்சமின் ரொனால்டு ராபின்சன் ஆஜரானார்.


