விளாத்திகுளம், அக். 10 –
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் வினியோகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, உதவி இயக்குனர் ஊராட்சிகள் சாந்தி, விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், தங்கவேல், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, விளாத்திகுளம் திமுக செயலாளர்கள் ராமசுப்பு, சின்னமாரிமுத்து, அன்புராஜன், இம்மானுவேல், ராதாகிருஷ்ணன், செல்வராஜ், மும்மூர்த்தி, நவநீதக்கண்ணன், காசிவிஸ்வநாதன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.



