விளாத்திகுளம், ஆகஸ்ட் 14 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி வார்டு எண் 9 முதல் 15-வது வார்டு வரை உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்கண்டேயன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
மேலும் வருவாய் துறை சார்பில் பயனாளிகளுக்கு முதல் பட்டதாரிக்கான சான்றிதழ், விதவைச் சான்றிதழ் மற்றும் பேரூராட்சி சார்பில் சொத்து வரி பெயர் மாற்றுதல் ஆணை மருத்துவத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன், விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் சக்திவேல், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் விமலா, அருள்மிகு சுப்ரமணியசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் குமாரி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, திமுக ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, சின்னமாரிமுத்து, அன்புராஜன், இம்மானுவேல் மாவட்ட பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



