திருவண்ணாமலை, ஆக. 25 –
திருவண்ணாமலையில் விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு, தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம், மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில் தேசிய அளவிலான திறந்த நம்பிக்கை மதிப்பீடு சதுரங்கப் போட்டி நடத்தப்பட்டது.
இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 500 க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் டி. சண்முக பிரியா துவக்கி வைத்தார். விக்னேஷ் கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் புரவலர் ஆர். குப்புசாமி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பள்ளியின் இயக்குநர் டாக்டர் கு. சந்தோஷ் குமார், பள்ளியின் நிர்வாகி டி.எஸ்.சவிதா, முதல்வர் எஸ்.தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சர்வதேச நடுவர் வி.எல்.ஆனந்த் பாபு, துணை தலைமை நடுவர் தமிழரசன் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர். போட்டியில் மெல்வின் ஜோஷுவா முதல் இடத்தையும், எம்.வினோத் குமார் இரண்டாம் இடத்தையும், குணசேகரன் மூன்றாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர். மேலும் ஒவ்வொரு பிரிவு வகை வாரியாக வெற்றி பெற்ற 92 நபர்களுக்கும் பரிசு தொகை மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டது.



