ராமநாதபுரம், ஜுலை 4 –
தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற நல வாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்கு காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ராமநாதபுரம் நகராட்சி பாத்திமா நகர் பகுதியில் ரூபாய் 1.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் ராமேஸ்வரம் நகராட்சி நடராஜபுரம் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடத்தையும் காணொளி காட்சியின் மூலம் திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் நகராட்சி பாத்திமா நகர் பகுதியில் உள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாஷா முத்துராமலிங்கம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி மருத்துவமனை உள் கட்டமைப்புகளை பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரத் துறை மருத்துவ அலுவலர்கள் டாக்டர் அர்ஜுன் குமார், ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் ஆர்.கே கார்மேகம், துணைச் சேர்மன் டி.ஆர். பிரவீன் தங்கம், நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வீன், நகர் நல அலுவலர் டாக்டர் ரத்தினகுமார், வட்டாரம் மருத்துவ அலுவலர் டாக்டர் ஜன்னத் யாஸ்மின், நகர் மன்ற உறுப்பினர் கயல்விழி, கட்டட பொறியாளர் அருணகிரி உட்பட கலந்து கொண்டனர்.