திருச்சி, மே 28 –
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் நடத்திய போராட்டத்தினால் இன்று கடையடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிமகன்கள் தனியார் பார்களை நோக்கி படையெடுத்தனர். முசிறி பகுதியில் திருச்சி சாலையில் உள்ள தனியார் பாரில் சில்லறை விற்பனை நடப்பதாக தகவல் அறிந்த முசிறி சார் ஆட்சியர் சுஷ்ரீ சுவாங்கி குந்தியா ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதிமீறல் கண்டறியப்பட்டதால், பாரில் சில்லறை விற்பனையில் ஈடுபட்டிருந்த வினோத் மற்றும் சரவணன் ஆகியோரை முசிறி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



