களியக்காவிளை, ஜூன் 24 –
படந்தாலுமூட்டில் மினி லாறி மோதி ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார். களியக்காவிளை அருகே படந்தாலுமூடு, குழிஞ்ஞன்விளை பகுதியைச் சேர்ந்தவர் குட்டி நாடார் மகன் செல்லையன் (76). இவருக்குத் திருமணமாகி மனைவி பிள்ளைகள் உள்ளனர். கூலிவேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் ஜுன் 16ம் தேதி ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த மினி லாரி மோதியது. இதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவரை அப்பகுதியினர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். தொடர்ந்து மேல் சிகிட்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிட்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சிகிட்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.