மார்த்தாண்டம், ஜன. 23 –
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு பொதுச்சின்னம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தனர். அதன்படி நேற்று விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி த வெக தொண்டர்கள் கொண்டாட்டினர்.
அதன்படி நேற்று மாலை கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் சபின் என்பவர் தலைமையில் 50 பேர் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். இதை அடுத்து மார்த்தாண்டம் போலீசார் மேற்கு மாவட்ட செயலாளர் சபின் உட்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


