மார்த்தாண்டம், ஜூன் 10 –
களியக்காவிளை அருகிலுள்ள வாறுதட்டு எம்.எம்.கே.எம்.உயர்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான அட்டயா பட்டயா விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். மாநில அளவிலான சப்ஜுனியர் அட்டயா பட்டயா விளையாட்டுப் போட்டிக்கு மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு குமரி மாவட்ட அளவிலான சப்ஜுனியர் மாணவர்களுக்கான அட்டயா பட்டயா விளையாட்டுப் போட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது. போட்டியில் வாறுதட்டு பள்ளி மாணவிகள் அபிஷிகா, அனுஷ்கா ஆகியோர் அட்டயா பட்டாயா அணியில் பங்கேற்க தகுதி பெற்றனர். மேலும் விரைவில் மாநில அளவிலான அட்டயா பட்டாயா போட்டியில் பங்கேற்கவிருக்கும் மாணவிகளைப் பள்ளியின் தாளாளர் ஜஸ்டின் சுதீஷ், தல நிர்வாகி சிஜோ, தலைமையாசிரியர் ரமேஷ், உடற்கல்வி ஆசிரியர் என்.எம்.பிரேம்ராஜ், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.