மார்த்தாண்டம், ஆக. 28 –
விளவங்கோடு வட்டம், மருதங்கோடு ஊராட்சிக்குட்பட்ட கழுவன்திட்டை புனித மார்டின் டி போரஸ் தேவாலய திருமண மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகம் நடந்தது. கலெக்டர் அழகு மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு முகாம்களில் பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களிலும் உரிய ஆவணங்கள் இணைத்து இருப்பதை வாங்கப்படுகிறதா, சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் தங்களை நாடி வந்து கேட்கும் போது தகுந்த பதில்களை அவர்களுக்கு வழங்குவதோடு, அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, விண்ணப்பித்த தகுதிவாய்ந்த விண்ணபங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து குறுமத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் உதவி வேண்டி விண்ணப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறுமத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு விண்ணப்பித்த தகுதி வாய்ந்த விண்ணபதாரர்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து குறுமத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடையினை ஆய்வு மேற்கொண்டு குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, கைரேகை பதிவு செய்யும் இயந்திரம், எடை இயந்திரம் ஆகியவற்றை ஆய்வு செய்ததோடு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்களின் இருப்பு மற்றும் தரங்களை ஆய்வு செய்யப்பட்டது. நடைபெற்ற ஆய்வில் இணைப்பதிவாளர் (கூட்டுறவு) சிவகாமி, வட்டாட்சியர் வயோலா பாய் (விளவங்கோடு), துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



