பூதப்பாண்டி, அக்டோபர் 02 –
பூதப்பாண்டியை அடுத்துள்ள நரிப் பாலம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி (50). இவருக்கு மனைவியும் இரு பையன்களும் உள்ளனர். இவருக்கு குடிபழக்கம் இருந்ததால் இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதில் இவரது மனைவி 15 நாட்களுக்கு முன்பு கோபித்து கொண்டு செல்லவே வாழ்வில் வெறுப்படைந்த செல்வராஜ் அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியுள்ளார்.
இதில் மரக்கிளை உடைந்து அவர் தூக்கில் தொங்கியபடியே கீழே விழுந்து கிடந்துள்ளார். அந்த வழியாக வந்த ஒரு பெண் பார்த்து தகவல் தெரிவிக்கவே பொது மக்கள் பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் சம்பவ இடம் வந்து பார்க்கும் போது அவர் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


