சென்னை, செப். 13 –
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய சென்னை மேற்கு மாவட்டத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் வி. ரமேஷ் ஏற்பாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த மருத்துவ முகாமை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியில் பேசியதாவது: பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து மக்களுக்கு உதவி வழங்கும் விதமாக பாஜக சார்பில் மருத்துவ முகாம்கள் மற்றும் உணவு வழங்குதல் போன்று பல்வேறு நலத்திட்டங்கள் நடத்தி வருகிறோம்.
மக்களுக்கு உதவி செய்யும் பணிகளை 13-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை 2 வாரங்களுக்கு தமிழக பாஜக பிரதமரின் பிறந்தநாளை கொண்டாடும் என்றார்.



