மதுரை, அக்டோபர் 02 –
மதுரை விளக்குத்தூண் அருகே ராம்ராஜ் காட்டனின் 6 வது பிரத்யேக ஷோரூமை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் தலைவரும், தாளாளருமான கே. ஹரி தியாகராஜன் திறந்து வைத்தார்.
இந்தியாவின் பாரம்பரியமிக்க ஆடைகள் தயாரிப்பில் முன்னணி பிராண்டாக திகழும் ராம்ராஜ் காட்டன், கோவில் நகரமான மதுரையில் அதன் 6-வது புதிய ஷோரூம் திறப்பு விழாவில் பேசிய ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன் கூறுகையில், தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியமிக்க நகரங்களில் ஒன்றாக திகழும் மதுரையில் அடுத்தடுத்த ஷோரூமை திறப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான ஆடைகளை தேர்வு செய்யும் வகையில் இங்கு ஏராளமான ஆடை ரகங்கள் உள்ளன. பாரம்பரியத்தை தினசரி வாழ்வில் கொண்டு வரவேண்டும் என்பதை மனதில் கொண்டு எங்களின் ஒவ்வொரு ஆடைகளும் தயாரிக்கப்படுகின்றன. மேலும் எங்களின் இந்த புதிய ஷோரூம் மூலம் மதுரை நகர மக்களுக்கு பாரம்பரியமிக்க ஆடைகள் முதல் நவீன ஆடை ரகங்கள் வரை விற்பனை செய்ய இருக்கிறோம் என்று தெரிவித்தார்.



