மதுரை, அக். 06 –
மதுரை வடக்கு மாசி வீதி பிள்ளையார் கோயிலில் அதிமுகவின் பிரச்சார நோட்டீஸிற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஏற்பாட்டில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில்: திமுகவின் நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டு “திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும்” துரோக மாடல் உருட்டுகள் என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் அடித்து
பொது மக்களுக்கு விநியோகிக்கும் பணியை தொடங்கியுள்ளது.
அதிமுக நோட்டீஸில் உள்ள திமுகவின் பல கோரிக்கைகளை சுட்டிக்காட்டி இதில் எந்த கோரிக்கைகள் நிறைவேற்றவில்லையோ அதை டிக் செய்யவும் என்று பொதுமக்களிடம் கேட்க உள்ளோம். இது துண்டு பிரசுரம் அல்ல. எங்கள் தொண்டர்கள் ஒவ்வொரு வார்டுகளாக, ஒவ்வொரு வீடாக சென்று குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரிடம் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்களா? இல்லையா? என கருத்துக்களை கேட்பார்கள். திமுக கொடுத்த 520 தேர்தல் வாக்குறுதிகளில் என்னென வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என அச்சிடப்பட்ட நோட்டிஸில் பொதுமக்கள் அவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்து தகவல் கூறுவார்கள். அதனை பொதுச் செயலருக்கு எங்கள் கட்சியின் சார்பில் அனுப்பி வைக்கப்படும்.
இந்த பணியானது ஒவ்வொரு வார்டு வாரியாக, அதிமுக சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம் மூலம் பொதுமக்களிடம் வழங்கி கருத்துகளை பதிவு செய்து ஒவ்வொரு வார்டாக சென்று கையெழுத்து வாங்க உள்ளனர் . திமுக அரசு தேர்தல் வாக்குறுதி என்னும் கவர்ச்சி காட்டி மக்களை ஏமாற்றி உள்ளது. சினிமாவில் நடிகைகள் எப்படி கவர்ச்சியை காட்டி நடிப்பார்களோ அது மாதிரி ஒவ்வொரு சினிமாவிலும், கதை ஒரு பக்கம் இருக்கும், கவர்ச்சி டான்ஸ் ஒரு பக்கம இருக்கும். தமனா ஒரு பாடலுக்கு மூன்று கோடியும் நயன்தாரா ஒரு பாட்டிற்கு ஐந்து கோடி ரூபாய் வாங்குகிறார்களோ அதே போல
தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில் திமுக உடான்ஸ் விட்டுள்ளது. அதை மக்களுக்கு கொண்டு சேர்க்க உள்ளோம்.
மேலும் சொத்து வரியை ஆண்டுதோறும் உயர்த்தியுள்ளனர். வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய், பூனை வளர்ப்புக்கு வரி போடுகின்றனர். தேர்தல் வாக்குறுதியை சினிமாவில் கவர்ச்சி டான்ஸ் போல கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டனர். தமிழகம் தற்பொழுது மது போதையில் தள்ளாடுகிறது. ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்கி விற்பனை செய்து ஒரு புது கான்செப்ட்டை உருவாக்கி விட்டார்கள்.
துணை முதல்வர் உதயநிதி, ஒரு செங்கலை வைத்துக் கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வருவது குறித்து கேலியாக பேசினார். ஆனால் அதிமுகவினருக்கு ரகசியம் தெரியாது. நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தான் தெரியும் என்று துணை முதல்வர் கூறினார்.
ஆனால் தற்பொழுது என்ன ஆனது? அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் முன்னேறவில்லை என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது தான்
இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோக்காக உள்ளது என்று கூறினார்.


